Kishore Kumar Hits

Arun VT - Manam Oru Kannadi текст песни

Исполнитель: Arun VT

альбом: Manam Oru Kannadi


தோற்றம் மாறும் மேகமும்
வடிவமில்லா நெய்தலும்
வெவ்வேறு நீளம் கொண்ட மரங்களும்
சமச்சீரற்ற குறிஞ்சியும்
சரிசமம் இல்லா செடிகளும்
அழகாய் தெரியும் மனிதனுக்கு
எடை பெருக்காகவும்
உடை அழுக்காகவும்
நிறம் குறையாகவும்
குறை பெரிதாகவும்
தெரிகிற காட்சிக்கோணம்
கண்ணின் வியாதியோ
மனிதனின் வியாதியோ
தெரிகிற காட்சிக்கோணம்
மனிதன் வியாதியோ
மனதின் வியாதியோ
மனம் மனம் மனம் மனம்
ஒரு கண்ணாடி
கண்டது தெரியும்
கண்டிறாததும் தெரியும்
நினைவலை தோன்றும் தருணம்
நிகழ்காலம் மறையும் உடனே
மனம் மனம் மனம் மனம்
அது கட்டிப்போட்டாலும்
மனம் மனம் மனம் மனம்
அது குழப்பிப்போட்டாலும்
மனம் மனம் மனம் மனம்
அது சுத்திப்போட்டாலும்
மனம் மனம் மனம் மனம்
வெறும் கண்ணாடி
குரங்குப்போல் குட்டிக்கரணம் அடிக்காமல்
பருந்து போல் பறக்க ஆசை
எதை பார்ப்பது
எதை தவிர்ப்பது
தடை உடைப்பது
செயல் முனைப்பது
உடல் உழைத்தது
திறன் கொடுத்தது
இவை அனைத்துமே
வழி வகுத்தது
அது கடக்கட்டும் கண்ணாடி
சில நாள் மறையும்
ஒரு நாள் உடையும்
மனம் மனம் மனம் மனம்
அது உடையட்டும்
மனம் மனம் மனம் மனம்
அது நொறுங்கட்டும்
மனம் மனம் மனம் மனம்
அது மறையட்டும்
மனம் மனம் மனம் மனம்
அது நொறுங்கட்டும்

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Tenma

Исполнитель

Achu

Исполнитель