கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே அடி மானே மானே ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே (கூண்டு) கண்ணு வளத்து கண்ணு தான துடிசுதுன்னா எதோ நடக்குமின்னு பேச்சு மானம் கொரையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது மாமா மாமா ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் கஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் பொள்ளாச்சி சந்தையிலே கொண்டந்த சேலையிலே சாயம் இன்னும் விட்டு போகல பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்திலே நேர்ந்து முடிச்ச கடன் தீரல மானே மனே ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே (கூண்டு)